பருவத்தால் அன்றிப் பழா !
அடுத்து முயன்றாலும் ஆகும்நாள் அன்றிஎடுத்த கருமங்கள் ஆகா - தொடுத்த உருவத்தால் நீண்ட உயர்மரங்கள் எல்லாம் பருவத்தால் அன்றிப் பழா.- ஒளவையார் (மூதுரை)பொருள்: உருவத்தால் விரிந்து,நீண்ட உயரமான மரங்கள் யாவும், பழுக்க வேண்டிய காலத்தில் அல்லாமல் பிறகாலத்தில் பழுக்காது. அதுபோல விடாமல் முயற்சி செய்தாலும், கூடிவர வேண்டிய காலம் வந்தால் அன்றி, தொடங்கிய காரியங்கள் வெற்றி பெறாது.அடுத்து-விடாது தொடர்ந்து, கருமங்கள்- காரியங்கள், தொடுத்த-விரிந்த, பருவத்தால்- பழுக்க வேண்டிய காலத்தில், பழா-பழுக்காது.நீதி:ஒரு செயலைத் தொடங்கும்முன் அதற்கு ஏற்ற காலம் அறிந்து தொடங்க வேண்டும்.
பிà®à®¿à®¤à¯à®¤à®¿à®°à¯à®¨à¯à®¤à®¾à®²à¯ à®à¯à®²à¯à®², நà®à¯à®à®¤à¯à®¤à®¿à®°à®à¯à®à®³à¯à®à¯ à®à¯à®à¯à®à¯à®à®µà¯à®®à¯. Current rating is:
இன்பத் தமிழ்
தமிழுக்கும் அமுதென்று பேர்! - அந்தத்தமிழ் இன்பத் தமிழ்எங்கள் உயிருக்கு நேர்!தமிழுக்கு நிலவென்று பேர்! - இன்பத்தமிழ் எங்கள் சமுகத்தின் விளைவுக்கு நீர்!தமிழுக்கு மணமென்று பேர்! - இன்பத்தமிழ் எங்கள் வாழ்வுக்கு நிருமித்த ஊர்!தமிழுக்கு மதுவென்று பேர்! - இன்பத்தமிழ் எங்கள் உரிமைச்செம் பயிருக்கு வேர்!தமிழ் எங்கள் இளமைக்குப் பால்! - இன்பத்தமிழ் நல்ல புகழ்மிக்க புலவர்க்கு வேல்!தமிழ் எங்கள் உயர்வுக்கு வான்! - இன்பத்தமிழ் எங்கள் அசதிக்குச் சுடர்தந்த தேன்!தமிழ் எங்கள் அறிவுக்குத் தோள்! - இன்பத்தமிழ் எங்கள் கவிதைக்கு வயிரத்தின் வாள்!தமிழ் எங்கள் பிறவிக்குத் தாய்! - இன்பத்தமிழ் எங்கள் வளமிக்க உளமுற்ற தீ!- பாவேந்தர் பாரதிதாசன்
பிà®à®¿à®¤à¯à®¤à®¿à®°à¯à®¨à¯à®¤à®¾à®²à¯ à®à¯à®²à¯à®², நà®à¯à®à®¤à¯à®¤à®¿à®°à®à¯à®à®³à¯à®à¯ à®à¯à®à¯à®à¯à®à®µà¯à®®à¯. Current rating is:
அல்லா என்பார் சிலபேர்கள்...
அல்லா வென்பார் சிலபேர்கள் ;
அரன்அரி யென்பார் சிலபேர்கள் ;
வல்லான் அவன்பர மண்டலத்தில்
வாழும் தந்தை யென்பார்கள் ;
சொல்லால் விளங்கா ' நிர்வாணம்'
என்றும் சிலபேர் சொல்வார்கள் ;
எல்லா மிப்படிப் பலபேசும்
ஏதோ ஒருபொருள் இருக்கிறதே !
அந்தப் பொருளை நாம்நினைத்தே
அனைவரும் அன்பாய்க் குலவிடுவோம்.
எந்தப் படியாய் எவர்அதனை
எப்படித் தொழுதால் நமக்கென்ன ?
நிந்தை பிறரைப் பேசாமல்
நினைவிலும் கெடுதல் செய்யாமல்
வந்திப் போம்அதை வணங்கிடுவோம் ;
வாழ்வோம் சுகமாய் வாழ்ந்திடுவோம். -நாமக்கல் கவிஞர் இராமலிங்கம் பிள்ளைமத நல்லிணக்கத்தை வலியுறுத்தும் அருமையான பாடல் இது. இதைவிட எளிமையாக, குழந்தைக்கும் புரியும் வகையில் மத நல்லிணக்கத்தை எடுத்துச் சொல்ல முடியுமா என்பது சந்தேகம்தான்.
//எந்தப் படியாய் எவர்அதனை
எப்படித் தொழுதால் நமக்கென்ன ?//
"நச்"சென்று ஒரு கேள்விகேட்டு, மதசகிப்புத்தன்மையை வலியுறுத்துகிறார்.அது மட்டும் இருந்துவிட்டால் தான், இன்றைய இன்னல்களுக்கு இடமே இல்லையே.
//நிந்தை பிறரைப் பேசாமல்
நினைவிலும் கெடுதல் செய்யாமல்//
என்று இரண்டே அடிகளில், அனைத்து மதங்களும் வலியுறுத்தும் அறநெறியை, சுருக்கமாகச் சொல்லிவிடுகிறார்.
"சூரியன் வருவது யாராலே?" என்ற பாடலின் ஒரு பகுதியாக வரும் இவ்வரிகளை, இறை வணக்கப் பாடலாகவும், சர்வமத வழிபாட்டுப் பாடலாகவும் பயன்படுத்தலாம். குழந்தைகளுக்குச் சொல்லிக் கொடுக்கலாம்.
பிà®à®¿à®¤à¯à®¤à®¿à®°à¯à®¨à¯à®¤à®¾à®²à¯ à®à¯à®²à¯à®², நà®à¯à®à®¤à¯à®¤à®¿à®°à®à¯à®à®³à¯à®à¯ à®à¯à®à¯à®à¯à®à®µà¯à®®à¯. Current rating is: